31."மலையைக் கடுகாக நினைத்தால் வெற்றி நிச்சயம். கடுகைக்கூட மலையாக நினைத்தால் தோல்வியே மிஞ்சும்."
32."இயற்கை, பொறுமை, காலம் ஆகியவைகள்தான் மூன்று சிறந்த மருத்துவர்கள்."
33."செயல்களைக் கடுமையாக்குவது சோம்பேறித்தனம்; அவைகளை எளிமையாக்குவது உழைப்பு."
34."வியப்பு புகழும்; அன்பு ஊமையாய் இருக்கும்."
35."அடிக்கடி கோபம் கொள்ளாதே; அது உன் அழிவுக்கு வழி வகுக்கும்."
36."விரைவில் உயர்வது பெரியது அல்ல. எப்பொழுதும் உயர்ந்தபடி இருக்கவேண்டும். அதுவே பெரிது."
37."ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை."
38."மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை; அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை."
39."உண்மையான அறிவாளி(அனைவரும்) தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும்."
40."எப்பொருளிலும் யாரிடத்தும் ஒருபோதும் பற்றுதல் வைக்காதே."
உலவு.comல் ஏகப்பட்ட விதிகள் உள்ளனபோலும். எப்பொழுது பார்த்தாலும் கீழிருக்கும் "தப்பு" செய்தி வருகிறது. ஆகவே உலவு உலவியில் இடமுடியவில்லை.
Friday, April 16, 2010
யாரோ சொன்னது - 31 - 40
Posted by ஞானவெட்டியான் at 4:33 PM 0 comments
Labels: யாரோ சொன்னது
Tuesday, April 13, 2010
யாரோ சொன்னது - 21 - 30
21. உன்னுடைய விருப்பங்கள் மகிழ்ச்சி தருவதில்லை; பிறர் உன்னை விரும்புவதே மகிழ்ச்சி தரும்.
22. "பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான் தன்னலமேயாகும்."
23. "உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொருவனைவிட முந்தச் செய்கிறது."
24. "நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக் கொள்."
25. "சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன."
26. "உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்."
27. "மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்."
28. "உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்."
29. "நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்."
30. "எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை."
Posted by ஞானவெட்டியான் at 4:45 PM 3 comments
Labels: யாரோ சொன்னது
Monday, April 05, 2010
யாரோ சொன்னது - 11 - 20
11."உன்னை நீ நம்பினால் ஊர் உன்னை நம்பும்."
12."பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகி
இருந்துகொள்வது நல்லது."
13."துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்."
14."வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை."
15."எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்."
16."ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்."
17."சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்."
18."இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!"
19."நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது."
20."துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது."
Posted by ஞானவெட்டியான் at 11:05 AM 0 comments
Labels: யாரோ சொன்னது





