Thursday, January 05, 2006

22.இது முதல் தடவை அல்ல

22.இது முதல் தடவை அல்ல
*******************************

விவேகானந்தர் ஒரு சமயம் தமிழகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் பிரபலம் அடையாத காலம். அவர் பயணித்த இரயில் பெட்டியில் ஆங்கிலேயச் சிப்பாய்கள் சிலர் இருந்தனர். இவரின் ஆடையைக் கண்டு, சந்நியாசிகளைப் பற்றித் தரக் குறைவாகப் பேசிக்கொண்டே வந்தனர். விவேகானந்தர் பதிலுக்கு ஒன்றுமே பேசாமல் வந்தார். ரயில் சேலம் வந்தபோது, அந்த ரயில் நிலைய அதிகாரியுடன் விவேகானந்தர் உரையாடுவது கண்டு சிப்பாய்கள்,"உமக்குத்தான் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்கிறதே! எங்கள் பேச்சை மறுத்து ஏன் எதுவும் சொல்லவில்லை?" என்று கேட்டனர்.

"முட்டாள்களை நான் சந்திப்பது இது முதல் தடவை அல்ல" என்றார் விவேகானந்தர்.

0 Comments: