Wednesday, December 21, 2005

3.பட்டினி

3.பட்டினி
*********
உலகில் விளையும் விவசாயப் பொருட்களைக் கொண்டு 1,200கோடி பேருக்கு உணவளிக்க முடியும். ஆயினும் குறைந்தது 85கோடி பேராவது பட்டினியுடன் உறங்குகின்றனர். தேவையான, சத்தான உணவு கிடைப்பதிலும் சிக்கல். அதிர்ச்சியான செய்தி. உலகில் 5விநாடிக்குள் ஒரு 10வயதுக்குட்பட்ட குழந்தை வீதம் இறந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நைஜீரியாவில், 16லட்சம் டன் தானியங்கள் விளையவேண்டியதற்குப் பதில் வெறும் 430டன்கள் மட்டுமே விளைந்துள்ளது. தான்சானியாவின் நிலைமை இதைவிட மோசம். உலக உணவுத் திட்டத்துக்கு இந்த ஆண்டு கிடைத்த உணவுப் பொருட்கள், சென்ற ஆண்டு கிட்டியதில் 70%.
இப்படியே போனால்...... பட்டினிச் சாவு நிச்சயம்

0 Comments: